ஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவுக்காக ஸ்கிரிப்ட் ஒன்றை எழுதியிருப்பதும் தனது ஒய்எம் புரொடக்சன் சார்பில் ஆரோஸ் இன்டர்நேஷனல்ஸுடன் இணைந்து தயாரிப்பதும் நாம் அறிந்ததே. இந்தப் படத்தை யார் இயக்குவார் என்பது தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் ராஞ்சனா படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் பெயர் முன்மொழியப்பட்டிருக்கிறது.
ஆனந்த் எல்.ராய் ஏற்கனவே இரு படங்கள் இயக்கியிருந்தாலும் 2011ல் வெளியான அவரின் தனு வெட்ஸ் மனு படமே அவரது பெயரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. அதன் பிறகு அவர் இயக்கிய ராஞ்சனா மிகப்பொpய வெற்றியை பெற்றது. தற்போது தனு வெட்ஸ் மனு படத்தின் சீக்வெலை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார்.
ரஹ்மான் தனது கதையை இயக்க ஆனந்த் எல்.ராயை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.